வேடிக்கையும் வினோதங்களையும் வெளிப்படுத்துவது நம் நீதித்துறைக்கு ஒன்றும் புதிதில்லை. இதோ மற்றுமொரு வேடிக்கையான தீர்ப்பு :
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை நீக்கவேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் சாலையோரக்கடைகள் அகற்றப்பட்டன.
பாஜக ஆட்சி செய்யும் சண்டிகர் அரசு வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டது! தேசிய மாநில நெடுஞ்சாலைகளில் தானே மதுக்கடைகள் கூடாதுன்னு சொன்னிங்க, ஓகே இனிமே அதன் பெயர் அது கிடையாது. அவை இனிமே உள்ளாட்சி சாலைகள் என அழைக்கப்படும் என்று மாநகராட்சி மற்றும் நகராட்சி சாலைகளை லோக்கல் சாலைகளாக பெயர் மாற்றி உத்தரவிட்டது. கடைகளும் வழக்கம்போல செயல்பட்டன.
இது தொடர்பாக ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு செல்கிறது. உச்சநீதிமன்றம், " மாநில சாலைகளின் பெயர்களை முடிவு செய்வது மாநில அரசுகளின் உரிமை. அதிலெல்லாம் நாங்க தலையிடமாட்டோம் " என சொல்லி வழக்கை முடித்துவைத்தது!
பாஜகவின் வழியொட்டி ஆட்சி நடத்தும் எடப்பாடி அரசு சும்மாயிருக்குமா? நாங்களாம் சட்டசபை கட்டிடத்தையே ஆஸ்பத்திரியா மாத்தனவங்கயா எங்களுக்கா சாலை பேர மாத்த முடியாது? என சண்டிகர் அரசின் முடிவை பின்பற்றி தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சியில் செல்கிற நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகள் என பெயர் மாற்றி மூடப்பட்ட மூவாயிரத்து சொச்சம் மதுக்கடைகளை மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ளது..!
No comments:
Post a Comment