Monday, 29 February 2016

I often see comments by friends that TN is lacking  and lagging behind other states.  And needless to add, none of them have ever stepped inside a PHC or GH

These are series of tweets by @puram_politics  who has actually visited these centres

I like #24 :) :)

-oOo-

1. There is an absurd anecdata discussion here
2. But the demand there is for data. So let me try giving that first.
3.
IMR:
TN: 22, India: 44
MMR:
TN: 97, India: 212

% of births assisted by skilled personnel:
TN: 91%, India: 47%

4.
% of women who gave birth had at least 1 antenatal care:
TN: 99%, India: 76%
% of post check:
TN: 91%, India: 41%

5.
% of children (12-23 months) full immunization:
TN: 80.9%, India: 43.5%

% of children with NO immunization:
TN: 0%, India: 5.1%

6.
% of children who had 1 dose of Vitamin A:
TN: 44.8%, India: 24.8%

% of children breastfeeding <1hr of birth:
TN: 76.1%, India: 40.1%

7.
% of adult women who get antenatal care:
TN: 99%, India: 76%

get tetanus vaccine during pregnancy:
TN: 96%, India: 76%

8.
% of PHCs with  essential drugs:
TN: 98%, India: 70%

Medical Officer:
TN:85%, 76%

Pharmacist:
TN: 94%, India: 69%

9. contd..for PHCs with (%)
Operating Theatre:
TN: 90%, India: 61%

Cold Chain Equipment:
TN 95%, India: 67%

10. All data collated from various government reports from 2005-11. I don't have updated data since I am not in Healthcare business anymore.

11. In 2010, I was involved with a government project to digitize and automate as far as possible the entire public health system of TN.

12. I visited almost all PHCs and 42 Secondary Care facilities. I just came out stunned at how dedicated government staff were.

13. The 42 secondary care hospitals now have a Hospital Management System implemented. It was then the first in the country. Don't know now.

14. If you visit any secondary care government hospital: you are given a patient ID and your medical record is stored for ease of diagnosis.

15. The doctor by looking at your history can quickly diagnose. The prescription is done digitally which the dispensary gets automated for.

16. This option has benefits for patients. But the system uses this information for inventory management of medical supplies.

17. Yes if you are middle class person obsessed with corruption: this system ensures there can be no leakage of medical supplies.

18. The other TN government agency that uses complete digitization of inventory to forecast demand: TASMAC. It does a brilliant job of it.

19. The staff allocation, medical supplies allocation, estimation of disease burden: all of these use quite good forecasting models.

20. The focus of various districts is targeted. For instance Kanyakumari focuses on Dengue/Malaria. Salem on IMR. And that's data driven.

21. The tertiary care facilities are distinct since they are often attached to a Medical College. That was a challenge.

22. They often had their own information system in silos. That was at least 5 years ago not integrated.

23. But since they were referral hospitals and were training medical students, they almost always ran at full capacity. Or over capacity.

24. For whatever reason doctors - from medical officers in PHCs to Deans of colleges - seemed to take enormous pride in what they did.

Do not walk into an ER of a large hospital. Especially night time. Watching unknown people being distraught over a dead 18 yo is disturbing.

Sunday, 28 February 2016

கனிமொழியுடன் ஒரு சந்திப்பு

"ஆட்சி மாற்றத்திற்கான சமூக வலைதள நண்பர்களின் சந்திப்பு" என்ற சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நானும் கலந்துகொண்டேன். பெயரைப்பார்த்தால் ஏதோ திமுக அதிமுகவிற்கு மாற்றாக நடைபெறப்போகும் சந்திப்பு என்பது போலத் தெரிந்தாலும் கனிமொழி பங்கு பெறுகிறார் என்பதிலேயே அது திமுக ஆட்சி வரவேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது என்பது புரியும்.  நான் இந்நிகழ்வில் கலந்துகொண்டதற்கு மூன்று காரணங்கள் :

1.இன்று எனக்கு விடுமுறை
2. நானும் திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என விரும்புபவன்
3.நிகழ்ச்சி நடந்த இடம் பெரியார் திடல். பெரியார் திடல் செல்வதற்காகவே காரணங்களைத் தேடுபவன் நான்.

நிறைய பேர் பேசியதால் ஆளுக்கு இரண்டு நிமிடங்கள் மட்டுமே தரப்பட்டது.  நான் பேசப்போன நேரம் ஆளுக்கு முப்பது விநாடிகள் மட்டுமே பேசவேண்டும் என்றனர். இது என்ன லாஜிக்கே இல்லாமல் 30 விநாடிகளில் பேச சொல்கிறார்களே என்று மனதில் நினைத்துக்கொண்டு பேசத்தொடங்கும் முன் "நான் இரண்டு நிமிடங்கள் தான் பேசப்போகிறேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் " என்று கூறிவிட்டே ஆரம்பித்தேன்.

நான் திமுக உறுப்பினர் இல்லாவிட்டாலும் திராவிட இயக்கத்தின் மீதுள்ள பற்று காரணமாக தேர்தல் அரசியலில் திமுகவை ஆதரிப்பவன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டேன்.  எந்த சாதி பின்புலமும் இல்லாமல் தமிழக அரசியலில் கோலோச்சுகிற கலைஞர் மீது சாதிய அடிப்படைவாதிகளுக்கு தீராத வன்மம் இருக்கிறது என்பதற்கான தகவல்களைத் தெரிவித்தபோது கனிமொழி அதை தலையசைத்து ஆமோதித்தது என் கண்ணில் பட்டது.  தமிழக தேர்தல்களில் வரலாற்றில் இல்லாதவகையில் இம்முறை தான் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் என்ற செய்தியைக் குறிப்பிட்டு,  அதன் காரணமாக திமுக மதுவிலக்கு அறிவிப்பை வெளியிட்டிருக்கவேண்டும் என்றேன். முதல்வரும் அதன் காரணமாகவே சென்ற வாரம் உள்ளாட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அறிவித்திருக்கிறார் என்ற ஒப்பீட்டையும் வைத்தேன்.

கடந்த திமுக ஆட்சியில் ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது மகளிர் சுய உதவிக்குழுக்களை மிகச்சிறப்பாக கையாண்டதையும் அதன் காரணமாக ஊரகப்புற பெண்கள் பொருளாதாரச் சுதந்திரம் பெற்றிருந்தனர்.  இந்த ஆட்சி அந்த விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டது. திமுக பெண் வாக்காளர்களை கவர வேண்டுமானால் தேர்தல் அறிக்கையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மறுமலர்ச்சி மட்டுமல்லாது பெண்களுக்கான இட ஒதுக்கீடு,  பணி நிரந்தரம் உள்ளிட்ட வாக்குறுதிகளை கட்டாயம் சேர்க்கவேண்டும் என்று யோசனை தெரிவித்தேன்.

செல்வி ஜெயலலிதா அம்மையார் மிகச்சிறந்த நிர்வாகத்திறன் கொண்டவர் என்று தொடர்ந்து அறிவுஜீவிகளும் ஊடகங்களும் கட்டமைத்துவந்த மாய பிம்பம் டிசம்பர் மாத மழையில் தரைமட்டமாகிப்போனது என்றும் திமுக 1996-2001 காலத்தில் வழங்கியது போன்ற நிர்வாக ரீதியிலான சிறந்த ஆட்சியை இம்முறை தருவதற்கு உறுதியெடுக்கவேண்டும் என்றேன். இந்த தேர்தலில் அதிமுக வெல்லவேண்டும் என்ற ஒரு அணியும் திமுக வெல்லவேண்டும் என்று இன்னொரு அணியும் திமுக மீண்டும் வந்துவிடவே கூடாது என்று மற்றொரு அணியும் வேலை பார்ப்பதால் திமுகவிற்கு இது சவாலான ஒரு தேர்தல்.  அதிமுக வின் தவறுகளால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.  கட்அவுட் கலாச்சாரம்,  பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் பேனர்கள்,  ஆளுயர மாலை,  தனிநபர் துதிபாடல் இவைகளை தற்போது பொதுமக்கள் விரும்புவதில்லை. அதிமுகவின் இந்த தவறுகளிலிருந்து திமுக பாடம் கற்கவேண்டுமே தவிர திமுகவும் இதே தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது அப்போதுதான் அதிமுக மீதான அதிருப்தியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள திமுகவால் முடியும் என்ற செய்தியை கடைசியாகத் தெரிவித்துவிட்டு என் பேச்சை முடித்துக்கொண்டேன்.

கடைசியாக கனிமொழி பேச வந்தார். எனது பேச்சை அவர் உன்னிப்பாக கவனித்துள்ளார் என்பது அவருடைய மறுமொழியில் தெரிந்தது. நான் பெண்கள் வாக்குகளை கவர்வதற்காக திமுக மதுவிலக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்று சொன்னதைக் குறிப்பிட்டு,  திமுக பெண்கள் வாக்குகளுக்காக மட்டும் அதை அறிவிக்கவில்லை,  அப்படியென்றால் ஆண்கள் வாக்குகள் எங்களுக்கு வேண்டாமா?  ஒட்டுமொத்த தமிழகத்தின் நன்மைக்காகத்தான் திமுக அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.  "சற்று முன்னர் தான் ஒருத்தர் பேனர் கட் அவுட்,  ஆளுயர மாலை இவற்றையெல்லாம் தவிர்க்கவேண்டும் என்றார். அதற்குள் நீங்கள் எனக்கு ஆளுயர மாலையை அணிவிக்கிறீர்கள்.  இது அன்பின் வெளிப்பாடு என்றாலும் இதைத் தவிருங்கள் " என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை செல்லமாக கேட்டுக்கொண்டார்.

கடைசியாக கனிமொழியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள அனைவரும் ஆர்வம் காட்டினார்கள். நான் "மேடம் ஒரு ரெக்வஸ்ட் " என்று கேட்டுவிட்டு "திராவிடக் கொள்கைகளை முன்னிறுத்தி இயக்கம் கண்ட திமுகவில் தற்போது கொள்கை சார்ந்த அரசியல் சற்று குறைந்து வருகிறது.  திமுகவில் இருப்பவர்களுக்கே திராவிட கொள்கைகள் பற்றிய புரிதல் சிலருக்கு இல்லை.  உங்களைப்போன்ற திமுகவின்  முன்னணித்தலைவர்கள் திராவிடக்கொள்கைகளை மையப்படுத்தி தொண்டர்களை தயார்படுத்தவேண்டும் " என்ற கோரிக்கையை வைத்தேன். "உங்களைப்போன்ற ஆட்கள் தொடர்ந்து திராவிட கொள்கைகளை எழுதுங்கள். அதிலேயே பலர் தெளிவடைவார்கள் " என்று பந்தை என்னிடமே திருப்பினார்.  நான் "நாங்கள் எழுதுவதை விட உங்களைப்போன்ற கட்சி முன்னணியினரின் முயற்சியால் தான் அது முடியும் " என்று தெரிவித்துவிட்டு நன்றி கூறி விடைபெற்றேன்.

Tuesday, 23 February 2016

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!

இன்று தமிழ்நாட்டின் அனைத்து தினசரி ஏடுகளிலும் முதல் பக்கத்தில்,  முதல்வரை கேலி செய்யும் விதமாக திமுக "என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா " என்ற விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. ஒரு திமுக அபிமானியாக என்னால் இந்த அணுகுமுறையை ரசிக்கமுடியவில்லை என்று முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

திமுக என்ன நோக்கத்திற்காக இப்படி விளம்பரம் செய்தார்களோ அதில் அவர்களுக்கு முழு வெற்றி கிடைத்திருப்பதாகவே நினைக்கிறேன்.  காலையில் தான் செய்தித்தாளில் வந்தது. அதற்குள் வாட்சப் பார்வர்டு மெசேஜாக இரண்டு நபர்களிடமிருந்து வந்துவிட்டது. திமுகவிற்கு இந்த தேர்தலில் ஒரு மிகப்பெரிய சவால் இருக்கிறது. அது பதினெட்டு முதல் 30 வயது வரையிலான வாக்காளர்களை கவர்வது.  பேஸ்புக்,  ட்விட்டர் மூலமாக மட்டுமே அரசியல் பற்றி தெரிந்துவைத்துள்ள இந்த  வயதுப்பிரிவினரில் 90 சதவீதம் பேர் மொண்ணைகள் தான். இந்த மொண்ணைகள்  வாட்சப்,  பேஸ்புக் போஸ்ட்டுகள் மூலமாக மட்டுமே தங்கள் அரசியல் ஞானத்தை வளர்த்துவைத்திருக்கிறார்கள். சமூகநீதி என்றால் என்ன,  மதச்சார்பின்மை என்றால் என்ன,  திராவிட இயக்கத்தினால் தமிழகம் அடைந்த பயன்கள் இவைகள் எதுவுமே தெரியாது.   இவர்கள் இப்படி இருப்பதற்கு நம்முடைய அரசியல் கட்சிகளும் ஒருவகையில் காரணம் என்பதை மறுக்கமுடியாது. துரதிர்ஷ்டவசமாக இந்தக்கூட்டம் தான் இந்த தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்க இருக்கின்றன.

ஏதோ இப்படியானவர்கள் இந்த காலகட்டத்தில் மட்டும் தான் இருக்கிறார்கள் என்றில்லை. எப்போதுமே இருந்து வருகிறார்கள் என்றாலும் இணையத் தொடர்பினால் ஒரு வலுவான சங்கிலிப்பிணைப்பு இவர்களுக்குள் தற்போது ஏற்படுகிறது.  அதனால் தான் ஒரு படத்தை ஒரு முறை பகிர்ந்தாலே பல லட்சம் பேரால் அது பகிரப்பட்டு பார்க்கமுடிகிறது. ஒரு காலத்தில் தனது சித்தாந்தத்தால் இளைஞர்களை கவர்ந்த திராவிட இயக்கம் இன்று அதில் தோல்வியடைந்துவிட்டது. சித்தாந்தத்தை வலியுறுத்தி பிரச்சாரம் செய்தாலும் அது செல்பி தலைமுறையினரிடையே எடுபடாது என்பதே நிஜம்.  அதனால் தான் முன்பு நான் ஒருவேளை திமுக பாஜக கூட்டணி ஏற்பட்டால் கூட அது இந்த தேர்தலில் வெற்றிபெறும் என்று தெரிவித்திருந்தேன். 

ஆட்சியை பிடித்தாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிற திமுகவிற்கு கட்டாயம் இந்த மொண்ணைகளின் ஆதரவு தேவை. கலைஞரை முன்னிறுத்துவதா ஸ்டாலினை முன்னிறுத்துவதா என்ற ஊசலாட்டத்திற்கும் இதுதான் காரணம். ஒரு திராவிட இயக்கப்பற்றாளனாக எனக்கு ஸ்டாலினைக் காட்டிலும் கலைஞர் தான் முக்கியம்.  இதே மனநிலை எல்லாருக்கும் இருக்காது என்பதும் எனக்குத்தெரியும். கலைஞர் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் இணைய தாக்குதல்களால் இந்த நிலை ஏற்பட்டிருக்கும் என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை.  ஏற்கெனவே ஒருமுறை கலைஞர் எதிர்ப்பாளர்களை Type 1, type 2, type 3 என்று நான் வகைப்படுத்தியிருந்தேன். எந்த சாதி பின்புலமும் இல்லாமல் தமிழ்நாட்டில் திராவிடக்கொள்கைகளை உயிர்ப்போடு வைத்திருக்கும் கலைஞர் மீது வன்மத்துடன் Type 2 ஆட்களால் நடத்தப்படும் தாக்குதல்களை ஏன் எதற்கு என்று ஆராயமல் லைக் ஷேர் செய்தே பழகிய Type 3 மொண்ணைகளை கவரவேண்டும் என்ற நிர்ப்பந்தம் திமுகவுக்கு இருப்பதை மறுக்கமுடியாது.

இவர்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்துகொண்ட திமுகவின் விளம்பரக்குழு அதை கனகச்சிதமாக நிறைவேற்றத்தொடங்கியிருக்கிறது. மீம்கள் ஆளும் இன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டின் அம்மா தன் மாநில மக்களை சந்திக்காமல் இருப்பதை மையப்படுத்தி "என்னம்மா இப்டி பன்றீங்களேம்மா? " என்ற பிரபலமான வாக்கியத்தைக் கொண்டு ஓங்கி அடித்துள்ளது திமுக.  இதற்கு பதிலடியாக சில நாட்களில் அதிமுகவும் ஆரம்பிக்கும் என்பது வேறு விஷயம். ஆனாலும் அமைச்சர்கள் கும்பிடுதல்,  துக்ளக் தர்பார்,  ஸ்டிக்கர் என பல அம்சங்களை மீம் போடுவதற்காகவே அதிமுக உருவாக்கி வைத்துள்ளதால் அதற்கெதிரான விளம்பரங்கள் தான் அதிக வெற்றியடையும். 1996 தேர்தலில் வளர்ப்புமகன் திருமணம்,  விதவிதமான செருப்புகள் பட்டுப்புடவைகள் எப்படி ஜெ அம்மையார் வீழ்வதற்கு முக்கியப்பங்காற்றினவோ அதே போல இந்த முறை ஸ்டிக்கர் தான் அவருடைய வீழ்ச்சிக் கு காரணமாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை. 

#STICKER_Govt

Saturday, 20 February 2016

கலைஞர் ஆட்சி கால சாதனைகள்

என் தலைவர் கலைஞர் அவர்கள்
தமிழகத்திற்கு என்ன செய்தார்?

தெரியாத இளைய
தலைமுறைகளுக்கு இதோ...

----------------------------------------------------------------------------

1) இந்தியாவிலேயே முதன் முதலில்
காவல் துறை ஆணையம்
அமைத்தது கலைஞர்.

2) குடியிருப்பு சட்டம்
அதாவது வாடகை நிர்ணயம் சட்டம்
போன்றவைகளை அமைத்து தந்தது தலைவர் கலைஞர்.

3) இலவச கான்கிரீட்
வீடுகளை ஒதுக்கப்பட்டோரு
க்கு கொடுக்கும் திட்டம் வகுத்தவர்
கலைஞர்.

4) கையில் இழுக்கும் ரிக்
ஷா ஒழித்து இலவச சைக்கில் ரிக்
ஷா தந்தவர் கலைஞர்.

5) பிச்சைகாரர்களுக்கு மறு வாழ்வுமையம்
அமைத்து கொடுத்தவர் கலைஞர்

6) முதலில் இலவச கண் சிகிச்சை முகாம்
அமைத்து கொடுத்தவர் கலைஞர்.

7) குடிநீர் வடிகால் வாரியம்
அமைத்து கொடுத்தவர் கலைஞர்.

8) தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்
அமைத்து தந்தவர் கலைஞர்.

9) 1500பேர் கொண்ட கிராமங்களுக்கும்
சாலை வழித்தடம் அமைத்து தந்தவர்
கலைஞர்.

10) மின்சாரம்
அனைத்து கிராமங்களுக்கும் செல்ல
வழித்தடம் அமைத்து தந்தவர் கலைஞர்.

11.போக்குவரத்தை தேசியமயமாக்கிவர்
கலைஞர்.

12.போக்குவரத்து துறை என்ற
துறையை உருவாக்கியவர் கலைஞர்.

13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
தாழ்த்தப்பட்டோருக்கென
துறை அமைத்து தந்தவர் கலைஞர்.

14.அரசியலமைப்பில் பிற்படுத்தப்பட்
டோருக்கான அமைப்பை தந்தவர் கலைஞர்.

15.அரசியலமைப்பில் BC-31% , SC-18% ஆக
உயர்த்தி தந்தவர் கலைஞர்.

16. P.U.C வரை இலவச
கல்வி உருவாக்கி தந்தவர் கலைஞர்.

17. மே 1 சம்பளத்துடன் கூடிய
பொது விடுமுறையாய் அறிவித்தவர்
கலைஞர்.

18. வாழ்ந்த மனிதரான நபிகள்
நாயகத்தின் பிறந்த
நாளை விடுமுறை தினமாக
அறிவித்தவர் கலைஞர்.

19.முதல் விவசாயக்
கல்லூரியை உருவாக்கி தந்தவர்
கலைஞர்.(கோவை)

20. அரசு ஊழியர்கள் குடும்ப நலதிட்டம்
தந்தவர் கலைஞர்.

21. அரசு ஊழியர்களுக்கு மேலான
ரகசிய அறிக்கை முறையை ஒழித்தவர்
கலைஞர்.

22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும்
திட்டம் தந்தவர் கலைஞர்.

23. கோயில்களில் குழந்தைகளுக்கான
கருணை இல்லம் தந்தவர் கலைஞர்.

24. சேலம்
இரும்பு தொழிற்சாலை அமைத்து தந்தவர்
கலைஞர்.

25. நில
விற்பனை வரையரை சட்டத்தை அமைத்தவர்
கலைஞர்.

26.இரண்டாம் அலகு நிலக்கரி மின்
உற்பத்தி நெய்வேலிக்கு கொண்டுவந்தவர்
கலைஞர்.

27.பெட்ரோல் மற்றும் ரசாயன
தொழிற்சாலையை தூத்துகுடிக்கு கொண்டுவந்தவர்
கலைஞர்.

28. SIDCO உருவாக்கியது கலைஞர்.

29. SIPCOT உருவாக்கியது கலைஞர்.

30.உருது பேசும்
இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டோரில்
தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தவர்
கலைஞர்.

31.பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம்
கொண்டுவந்தவர் கலைஞர்.

32. மனு நீதி திட்டம் தந்தவர் கலைஞர்.

33. பூம்புகார் கப்பல்
நிறுவனத்தை தந்தவர் கலைஞர்.

34. பசுமை புரட்சி திட்டத்தை தந்தவர்
கலைஞர்.

35. கொங்கு வேளாளர்
இனத்தை பிற்படுத்தப்பட்டோரில்
இணைத்தவர் கலைஞர்.

36. மிக பிற்படுத்தப்பட்டோரில் வன்னியர்
சீர் மரபினரை சேர்த்தவர் கலைஞர்.

37. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20%
தனி இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.

38. தாழ்த்தப்பட்டோருக்கு 18% தனி இட
ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.

39. பழங்குடியினருக்கு 1% தனி இட
ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.

40. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு இலவச
கல்வி தந்தவர் கலைஞர்.

41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச
கல்வி இளகலை பட்டப்படிப்பு வரை தந்தவர்
கலைஞர்.

42. தாழ்த்தப்பட்டோர்களுக்கு இலவச
கல்வி தந்தவர் கலைஞர்.

43. இந்தியாவிலேயே முதன் முறையாக
விவசாயத்திற்கு இலவச மின்சாரம்
தந்தவர் கலைஞர்.

44. சொத்தில் பெண்ணுக்கும் சம
உரிமை உள்ளது என
சட்டமாக்கியது கலைஞர்.

45. அரசு வேலைவாய்ப்புகளில்
பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு தந்தவர்
கலைஞர்.

46. ஆசியாவிலே முதன் முறையாக
கால்நடை மற்றும் விலங்குகள்
அறிவியல் பல்கலைகழகம் அமைத்தவர்
கலைஞர்.

47. ஏழை பெண்களுக்கு திருமண
நிதி உதவி திட்டம் தந்தவர் கலைஞர்.

48. விதவை பெண்கள் மறுமண
நிதி உதவி திட்டம் தந்தவர் கலைஞர்.

49. நேரடி நெல் கொள்முதல் மையம்
அமைத்து தந்தவர் கலைஞர்.

50. நெல் கொள்முதலில்
ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம்
செய்தவர் கலைஞர்.

51. தமிழ்நாடு நுகர் பொருள்
வாணிபக்கழகத்தை அமைத்தவர்
கலைஞர்.

52.கர்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டத்தை தந்தவர்
கலைஞர்.

53. பெண்கள் சுய
உதவிகுழுக்களை அமைத்து தந்தவர்
கலைஞர்.

54. மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலைகழகத்தை நிறுவியவர் கலைஞர்.

55. பாவேந்தர் பாரதிதாசன்
பல்கலைகழகத்தை நிறுவியவர் கலைஞர்.

56. டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ
கல்லூரியை நிறுவியவர் கலைஞர்.

57. முதன் முதலில் காவிரி நீதிமன்றம்
அமைக்க முற்பட்டவர் கலைஞர்.

58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல்
கொண்டு வந்தவர் கலைஞர்.

59. உள்ளாட்சி பதவிகளில் 33%
பெண்களுக்கு இட ஒதுக்கீடு தந்தவர்
கலைஞர்.

60. இரு பெண் மேயரில் ஒருவர்
தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர
செய்தவர் கலைஞர்.

61. மெட்ராஸ் கலைஞர்.

62. முதல் முறையாக
விதவை பெண்களுக்கும் பொறியியல்
மற்றும் மருத்துவ கல்லூரியில்
இடமளிக்க வழிவகை செய்தது கலைஞர்.

63. தொழிற்சாலைகளுக்கான
வெளிப்படை கொள்கை அமைத்து தந்தவர்
கலைஞர்.

64. முதல் முறையாக விதவை பெண்கள்
தொழில் தொடங்க உதவியவர் கலைஞர்.

65. கிராமங்களில் கான்கீரிட்
சாலை அமைத்து தந்தவர் கலைஞர்.

66. 24 மணி நேரமும் மருத்துவ
சேவை தந்தவர் கலைஞர்.

67. தொழில்முறை கல்வியில் கிராமபுற
மாணவர்களுக்கு 15% இட
ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.

68. சமத்துவபுரம் தந்தவர் கலைஞர்.

69. கிராமங்களில் மினி-பஸ்
சேவையை கொண்டு வந்தவர் கலைஞர்.

70. இந்தியாவிலேயே முதன் முறையாக
டாக்டர் அம்பேத்கார் பெயரில் சட்ட
கல்லூரியை நிறுவியவர் கலைஞர்.

71. பெரியார் பல்கலைகழகம் நிறுவியவர்
கலைஞர்.

72. உலக தமிழர்களுக்கு உதவ தமிழ்
மெய்நிகர் பல்கலைகழகத்தை தந்தவர்
கலைஞர்.

73. உருது அக்காடமி தந்தவர் கலைஞர்.

74. சிறுபான்மையினர் பொருளாதார
வளர்ச்சி அமைப்பை ஏற்படுத்தியவர்
கலைஞர்.

75. உழவர்சந்தை திட்டத்தை தந்தவர்
கலைஞர்.

76. வருமுன் காப்போம் திட்டத்தை தந்தவர்
கலைஞர்.

77.கால்நடை பாதுகாப்பு திட்டத்தை தந்தவர்
கலைஞர்.

78. 133 அடி திருவள்ளுவர்
சிலை கன்னியாகுமாரியில் வைத்தவர்
கலைஞர்.

79. டைடல் பார்க் சென்னையில்
அமைத்தவர் கலைஞர்.

80. வீட்டுமனை வழங்கும்
திட்டத்தை தந்தவர் கலைஞர்.

81. மாவட்ட,மாநில அளவில் முதல்
மூன்று இடங்களில்
வருவோருக்கு மேற்படிப்பு உதவி தொகை தந்தவர்
கலைஞர்.

82. ஆசியாவிலேயே மிக பெரிய
பேருந்து நிலையம்
சென்னை கோயம்பேடு நிலையம்
அமைத்து தந்தவர் கலைஞர்.

83. விவசாய
கூலி வேலை செய்வோர்களுக்கு
நலவாரியம் அமைத்து தந்தவர் கலைஞர்.

84. பொது கூலிவேலை செய்வோர்
நலவாரியம் அமைத்து தந்தவர் கலைஞர்.

85. அறிஞர்களுக்கும்,தியாகிகளுக்கும்
மணிமண்டபம் கட்டிதந்தவர் கலைஞர்.

86. 20 அணைகள் கட்டி தந்தவர் கலைஞர்.

87. பள்ளிகளில்
உணவோடு முட்டை தந்தவர் கலைஞர்.

88. மதுரை நீதிமன்றம் கட்டி தந்தவர்
கலைஞர்.

89. இலவச பஸ் பாஸ் தந்தவர் கலைஞர்.

90.அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை தந்தவர்
கலைஞர்.

91. நமக்கு நாமே திட்டத்தை தந்தவர்
கலைஞர்.

92. நலிவுற்ற குடும்பநல
திட்டத்தை தந்தவர் கலைஞர்.

93. 9 மாவட்டங்களில் புதிய
மாவட்டாச்சியர்
அலுவலகங்களை கட்டி தந்தவர் கலைஞர்.

94. 104 கோடி ரூபாயில்
சென்னை பொது மருத்துவமணை புதிய
கட்டிடம் தந்தவர் கலைஞர்.

95. 13000 மக்கள் நலப்பணியாளர்கள்
நியமனம் செய்தவர் கலைஞர்.

96. முதல் முறையாக 10000
சாலை பணியாளர்களை நியமனம்
செய்தவர் கலைஞர்.

97. சென்னையில்
போக்குவறத்து நெரிசலை தவிர்க்க 9
மேம்பாலங்களை கட்டி தந்தவர் கலைஞர்.

98. ரூ.1500 கோடியில் 350
துணை மின்நிலையங்களை உருவாக்கியவர்
கலைஞர்.

99. ஒப்பந்த பணியாளர்களுக்கு
ஓய்வூதிய திட்டத்தை தந்தவர் கலைஞர்.

100.போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய
திட்டத்தை தந்தவர் கலைஞர்.

101. வேலூர்,தூத்துகுடி,கன்னியாகுமரியில் புதிய மருத்துவ
கல்லூரிகளை அமைத்து தந்தவர்
கலைஞர்.
102. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்.
திட்டத்தை தந்தவர் கலைஞர்.

103. பொது விநியோக திட்டத்தின் மூலம்
சமையல் எண்ணை மற்றும் பல
வீட்டு பொருட்க்கள் நியாயவிலையில்
தந்தவர் கலைஞர்.

104: free professional education (engg,medical,l
aw,...) For first generation graduates : Plan
implemented by @kalaignar89 @pugalmani55

104. நியாயவிலைக்டையில் 10 சமையல்
பொருட்க்களை ரூ.50 க்கு தந்தவர் கலைஞர்.

105. விவசாய கடன் 7000
கோடியை தள்ளுபடி செய்யவைத்தவர்
கலைஞர்.

106. சரியான நேரத்தில்
வங்கி கடனை திருப்பி செலுத்தும்
விவசாயிகளுக்கு வட்டி இல்லை என்றவர்
கலைஞர்.

107. மேம்படுத்தப்பட்ட நெல் கொள்முதல்
விலை ரூ.1050 ஆக உயர்த்தியவர்
கலைஞர்.

108. வகைப்படுத்தப்பட்ட நெல் கொள்முதல்
விலை ரூ.1100 ஆக உயர்த்தியவர்
கலைஞர்.

109. 172 உழவர் சந்தைகளாக
உயர்த்தியவர் கலைஞர்.

110. ஒரு டன் கரும்பின் கொள்முதல்
விலை ரூ.2000 ஆக உயர்த்தியவர்
கலைஞர்.

111. மாவட்டத்திற்குள் நதிநீர்
இணைப்பு திட்டம் தந்தவர் கலைஞர்.

112. ரூ.189 கோடி செலவில் காவிரி-
குண்டூர் நதிநீர் இணைப்பு திட்டம்
தந்தவர் கலைஞர்.

113. ரூ.369 கோடி செலவில் தாமிரபரணி-
கருமேனியாரு-நம்பியாரு நதிநீர்
இணைப்பு திட்டம் தந்தவர் கலைஞர்.

114. காமராஜர் பிறந்த
நாளை கல்வி மேம்பாட்டு தினமாக
அறிவித்தவர் கலைஞர்.

115. பொது நுழைவுத்
தேர்வை ரத்து செய்தவர் கலைஞர்.

116. 10 ம் வகுப்பு வரை தமிழ்
கட்டாயபாடமாக்கியது கலைஞர்.

117. 623 கோடி செலவில் 5824 கோவில்கள்
புனரமைத்து கும்பாபிஷேகம்
பணி செய்தவர் கலைஞர்.

118. அர்ச்சகர்கள்,பூசாரிகளுக்கு இலவச
சைக்கிள் வழங்கியவர்
.
119. ரூ.2 லட்சம் மதிப்புள்ள இலவச
மருத்துவ காப்பீடு திட்டம் தந்தவர்
கலைஞர்.

120. இதயநோய்,சர்க்கரை நோய்,புற்று நோய்க்கான நலமான
தமிழகம் திட்டம் தந்தவர் கலைஞர்.

121. மத்திய அரசோடு இணைந்து 108
ஆம்புலன்ஸ் சேவையை தந்தவர்
கலைஞர்.

122. 25 புரிந்துணர்வு ஒப்பந்தம்
கையெழுத்தாகி 37 புதிய
நிறுவனங்களை வர செய்து 41,090
கோடி முதலீடை கொண்டுவந்தவர்
கலைஞர்.

123. 37 நிறுவன அனுமதியால் 3 லட்சம்
பேர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தந்தவர்
கலைஞர்.

124. 5 லட்சம்
இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு தந்தவர்
கலைஞர்.

125. புதிய டைடல் பார்க்
திருச்சி,கோவை,மதுரை,திருநெல்வே
லியில் உருவாக்கியவர்
.
126. அனைத்து கிராம
முறுமலர்ச்சி திட்டம் தந்தவர் கலைஞர்.

127. பேருந்து கட்டணம் ஏற்றாமல் 13000
புதிய பேருந்துகளை தந்தவர் கலைஞர்.

128. அருந்ததியினர் இனத்திற்கு 3%
தனி இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.

129.அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளோடு 10,096
கிராம பஞ்சாயத்தை உருவாக்கியவர்
கலைஞர்.

130. 420 பேரூராட்சிகள்
உருவாக்கி அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம்
தந்தவர் கலைஞர்.

131. அனைத்து இனத்தினரும் அர்ச்சகர்
ஆகும் உரிமையை பெற்று தந்தவர்
கலைஞர்.

132. உலக தரம் வாய்ந்த
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நிறுவியவர்
கலைஞர்.

133.ஆசியாவையே திரும்பி பார்க்கவைத்த
புதிய சட்டமன்றம் நிறுவியவர் கலைஞர்.

134. அடையார் சூழியல்
ஆராய்ச்சி பூங்கா அமைத்தவர் கலைஞர்.

135.சென்னை செம்மொழி பூங்கா அமைத்து தந்தவர்
கலைஞர்.

136. கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம்
தந்தவர் கலைஞர்.

137. ஜப்பான்
நாட்டு வங்கி உதவியோடு மெட்ரோ ரயில்
திட்டம் தந்தவர் கலைஞர்.

138. ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்
தந்தவர் கலைஞர்.

139. ராமநாதபுரம்-பரம
க்குடி கூட்டு குடிநீர் திட்டம் தந்தவர்
கலைஞர்.

140. கலைஞர் வீடு திட்டம் தந்தவர்
கலைஞர்.

141. முதல் உலக தமிழ்
செம்மொழி மாநாடு நடத்தியவர் கலைஞர்.

142.தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர்
கலைஞர்.

143. 119 புதிய
நீதிமன்றங்களை உருவாக்கியவர்
கலைஞர்.

144. மாலை நேரம் மற்றும்
விடுமுறை தின
நீதிமன்றங்களை உருவாக்கி தந்தவர்
கலைஞர்.

145. அண்ணா தொழில்நுட்ப
பல்கலைகழகம் திருச்சி,கோவை,ம
துரை,திருநெல்வேலியில்
உருவாக்கி தந்தவர் கலைஞர்.

146. தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய
ஆணையம் அமைத்து தந்தவர் கலைஞர்.

147. சமச்சீர் கல்வி தந்தவர் கலைஞர்.

148. இலவச வண்ண
தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டம்
தந்தவர் கலைஞர்.

149. முதல்
பட்டதாரிக்கு ஆண்டுக்கு 20,000 வீதம் 4
ஆண்டுகளுக்கு 80,000 பொறியியல்
கல்வி கட்டணம் வழங்கியவர் கலைஞர்.

150. இஸ்லாமியர்களுக்கு 3.5% தனி இட
ஒதுக்கீடு வழங்கியவர்
.
151. இலவச
எரிவாயு உருளை வழங்கியவர் கலைஞர்.

152. பேருந்து,பால்,மின்சார
கட்டணங்களை உயர்த்தாதவர் கலைஞர்.
# ஏன் என்றால் அது ஏழை,நடுத்தரவர்க்கங்களின் அவசிய பயன்பாடு.

153. மாவட்ட தலைநகரங்களில் மருத்துவ
கல்லூரி,பொறியியல்
கல்லூரி துவக்கியவர் கலைஞர்.

இப்படி இன்னும் பல கலைஞர் வகுத்த
மக்கள் நலத் திட்டங்கள் அதிகம்
இருக்கிறது நண்பர்களே #தமிழக
மக்களின் நலமே கலைஞரின் நலம். !!